மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா - பாக். போட்டி?
12:42 PM Jun 17, 2025 IST | Murugesan M
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடருக்கான போட்டிகள் பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மைதானங்களில் நடைபெறவுள்ளன. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் மட்டும் இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
Advertisement
பெங்களூருவில் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement