For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுரை சித்திரை திருவிழா - வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலம்!

09:16 AM May 15, 2025 IST | Ramamoorthy S
மதுரை சித்திரை திருவிழா   வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலம்

மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார்.

Advertisement

அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தினர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement