மதுரை சித்திரை திருவிழா : 7 ஆம் நாள் விழாவில் யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்!
03:14 PM May 06, 2025 IST | Murugesan M
மதுரை சித்திரைத் திருவிழாவின் 7 ஆம் நாள் நிகழ்வில் மீனாட்சி அம்மன் யாளி வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வரர் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளிக் காட்சியளித்தனர்.
Advertisement
அந்த வகையில் விழாவின் 7 ஆம் நாள் நிகழ்வில் மீனாட்சி அம்மன் யாளி வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை நந்திகேஸ்வரர் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement