மதுரை சித்திரை திருவிழா தனித்தனி குதிரை வாகனத்தில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர்!
01:07 PM May 04, 2025 IST | Ramamoorthy S
மதுரை சித்திரை திருவிழாவின் 5 ஆம் நாளில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் தனித்தனி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Advertisement
அந்த வகையில் விழாவின் 5 ஆம் நாளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் தனித்தனி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டனர்.
Advertisement
Advertisement