For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுரை : பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்!

03:52 PM Mar 12, 2025 IST | Murugesan M
மதுரை   பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்

மதுரை வாடிப்பட்டியில் தனியார் மினி பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புச்சம்பட்டி கிராமத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு சென்ற மினி பேருந்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, உள்ளே இடமில்லாததால் பேருந்துக்கு மேலேறிய பள்ளி மாணவர்கள், மேற்கூரையில் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.

Advertisement

போதிய பேருந்து வசதி இல்லாததே மாணவர்கள் இவ்வாறு பயணம் மேற்கொள்ள காரணம் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement