மனித தலையுடன் சாமியாடிய விவகாரம் - 5 பேர் மீது வழக்கு!
03:37 PM Jun 09, 2025 IST | Murugesan M
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீரவநல்லூர் அருகே உப்பூரில் உள்ள ஊர்காடு சுடலைமாடசாமி கோயில் கொடை விழா கடந்த 6 -ந் தேதி நடைபெற்றது.
Advertisement
அன்றிரவு 12 மணிக்கு நடைபெற்ற சாமக்கொடையின்போது வேட்டைக்குச் சென்ற சாமியாடிகள் சுடுகாட்டிலிருந்து கோவிலுக்குத் திரும்பியபோது மனித தலையுடன்
வந்து சாமியாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த காட்சிகள் வைரலான நிலையில் வெள்ளங்குளி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சாமியாடிகள் 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement