For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த 3 வயது குழந்தை : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

03:33 PM Mar 12, 2025 IST | Murugesan M
மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த 3 வயது குழந்தை   தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் உதயன், மீனா தம்பதியினருக்கு, 3 வயதில் பிரதிக்‌ஷா என்ற குழந்தை உள்ளது. இக்குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தது.

Advertisement

அப்போது எவ்வித பாதுகாப்பு வேலிகளும் இல்லாமல் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்த குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் பிரதிஷாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு வேலிகளோ, உபகரணங்களோ இல்லாமல் வடிகால் கால்வாய் பணிகளை மேற்கொள்வதால் தான் விபத்து நேரிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் குழந்தை கால்வாயில் விழுந்ததற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement
Tags :
Advertisement