For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

07:47 AM Jun 28, 2025 IST | Ramamoorthy S
மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர்   சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால், சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது.

இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள குகேஷை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement