For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றில் இந்திய வீரர்- வீராங்கனைகள் தோல்வி!

12:47 PM May 28, 2025 IST | Murugesan M
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்   முதல் சுற்றில் இந்திய வீரர்  வீராங்கனைகள் தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர்- வீராங்கனைகள் தோல்வியடைந்தனர்.

சிங்கப்பூரில் இன்று தொடங்கிய இத்தொடர் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத்- ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார். ராஜாவத் 21 க்கு 14, 10 க்கு 21, 14 க்கு 21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகளான அன்மோல் கார்ப் மற்றும் மாள்விகா பான்சோத் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement