மெக்சிகோ : மத நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு - 12 பேர் பலி, 20 பேர் காயம்!
05:33 PM Jun 26, 2025 IST | Murugesan M
மெக்சிகோவில் மத நிகழ்ச்சியில் நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
குவானாஜூவாட்டோ மாகாணத்தில் இராவுபுவாடா நகரில் மத நிகழ்வையொட்டி வீடு ஒன்றில் பலர் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement
அப்போது துப்பாக்கியோடு அங்கு வந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement