For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

01:29 PM Jul 03, 2025 IST | Ramamoorthy S
ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது தடுத்த மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் சிறப்பு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பேருந்து நிலையத்தில் தங்கவேலு என்ற மாற்றுத்திறனாளி பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மது விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் சிறப்பு காவலர் லிங்கசாமியிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

இதனடிப்படையில், ஜூன் 14ஆம் தேதி தங்கவேலுவின் பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது சிறப்பு காவலர் லிங்கசாமியை தரக்குறைவாக பேசிய தங்கவேலு, அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். பதிலுக்கு காவலர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த தங்கவேலுவின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இருதரப்பு சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறப்பு காவலர் லிங்கசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement