For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 44 பேர் கைது : அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா ஆளுநர் வழக்கு!

11:43 AM Jun 10, 2025 IST | Murugesan M
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 44 பேர் கைது   அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா ஆளுநர் வழக்கு

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா ஆளுநர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல்,  தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த என்ஜி எனப்படும் தேசிய காவல் படை போலீசாரை அனுப்பி வைத்து அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

Advertisement

இந்நிலையில் அதிபர் டிரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூஸ்கம், உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராக 2 ஆயிரம் தேசிய காவல் படை போலீசாரை குவித்தது சட்ட விரோதம் என எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement