For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பட்ஜெட் : எல். முருகன் நம்பிக்கை!

01:30 PM Feb 02, 2025 IST | Murugesan M
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பட்ஜெட்   எல்  முருகன் நம்பிக்கை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் என மத்திய அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக தொழில் தொடங்கும் பட்டியலின சமூக இளைஞர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கடனுதவி கிடைக்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Advertisement

மீனவர்கள், பால் வியாபாரிகளுக்கு கிஷான் கிரெடிட் அட்டை மூலம் மூன்று லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை கடனுதவி கிடைக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை வரவேற்ற மத்திய அமைச்சர் எல். முருகன், 12 லட்ச ரூபாய் வரை வருமான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement