வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாடிக்கையாளர் தப்பியோட்டம்!
02:00 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
கோவை மாவட்டம் வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு வாடிக்கையாளர் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மொபைல் கடையில் ரீசார்ஜ் செய்து விட்டு பணம் தர மறுத்து ஊழியரிடம் பிரவீன்குமார் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Advertisement
பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடை ஊழியர் பாலனை சரமாரியாக குத்தி விட்டு பிராவீன்குமார் தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாலன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement