For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வேளச்சேரியில் காவலர் தாக்கப்பட்ட விவகாரம் - தந்தை, மகன் கைது!

01:24 PM Apr 15, 2025 IST | Ramamoorthy S
வேளச்சேரியில் காவலர் தாக்கப்பட்ட விவகாரம்   தந்தை  மகன் கைது

வேளச்சேரி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிய விவகாரத்தில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் காவலர் காமராஜ் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை ஓரமாக போக சொன்னதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால், மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் காவலர் காமராஜ் புகார் அளித்த நிலையில், தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement