For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஷபாலி வர்மா, தீப்தி சர்மா அபாரம் - உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

06:12 AM Nov 03, 2025 IST | Ramamoorthy S
ஷபாலி வர்மா  தீப்தி சர்மா அபாரம்   உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

Advertisement

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், எடுத்தனர்.

பின்னர், 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

Advertisement

இதனால் அந்த அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியதை தொடர்ந்து நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்,

Advertisement
Tags :
Advertisement