ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் - பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!
07:21 AM Jun 06, 2025 IST | Ramamoorthy S
1972-ம் ஆண்டு போடப்பட்ட ஷிம்லா ஒப்பந்தம் ஒரு 'இறந்துபோன ஆவணம்' என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, தாக்குதலை நிறுத்த இந்தியாவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் இரு நாட்டு ராணுவமும் தாக்குதலை நிறுத்தியதால் எல்லை பகுதிகளில் அமைதி திரும்பியுள்ளது.
Advertisement
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், ஷிம்லா ஒப்பந்தம் ஒரு இறந்துபோன ஆவணம் எனவும், எல்லை கட்டுப்பாட்டு கோடுகள் முறையான எல்லை அல்ல, அது வெறும் போர் நிறுத்த கோடுகள் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement