செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு இரு முறை பொதுத்தேர்வு - சிபிஎஸ்சி முடிவு!

06:56 AM Feb 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளது..

Advertisement

டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் , தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிலிருந்து 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளதால், மார்ச் 9ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களை கருத்துகளை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி முதற்கட்ட பொதுத்தேர்வு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரையும், 2-ம் கட்ட பொதுத்தேர்வு மே 5 முதல் 20 வரையும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

Advertisement
Tags :
cbseCentral Board of Secondary EducationMAINpublic examination.public examinations will be conducted twiceUnion Education Minister Dharmendra Pradhan
Advertisement