செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அண்ணா பல்கலை மாணவி வழக்கை கண்காணித்து வருகிறோம் - சென்னை உயர் நீதிமன்றம்

05:02 PM Jan 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பான போராட்டத்திற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் பாமக வழக்கறிஞர் பாலு அவசர முறையீடு செய்தார்.

இந்த விவகாரத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியல் ஆக்குவது ஏன் என வினவினார்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்கு ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும் எனக்கூறிய நீதிபதி, மாணவி விவகாரம் தொடர்பான போராட்டத்திற்கு அனுமதி கோரிய பாமகவின் முறையீட்டை விசாரிக்க முடியாது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

Advertisement
Tags :
Anna UniversityAnna University campuschennai high courtchennai policeDMKGnanasekaran arrestjudge velmuruganMAINstudent sexual assaulttamilnadu government
Advertisement