செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புல்லட் ராஜா காட்டு யானை!

03:28 PM Dec 28, 2024 IST | Murugesan M

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புல்லட் ராஜா காட்டு யானை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

பந்தலூர், சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் புல்லட் ராஜா என்ற காட்டு யானை வெகு நாட்களாக உலா வந்தது. 45க்கும் மேற்பட்ட வீடுகளை அந்த யானை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாயினர்.

இதையடுத்து, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புல்லட் ராஜாவை 2 டோஸ் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் நேற்று பிடித்தனர்.

Advertisement

பிடிபட்ட யானை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், யானையின் செயல்பாடுகளை முழுமையான அறிந்த பின் வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Anaimalai Tiger Reserve.Bullet RajaCherambadielephantMAINPandalur
Advertisement
Next Article