ஈரோடு அருகே ரவடி மற்றும் அவரது மனைவி காரில் வைத்து வெட்டிக்கொலை!
08:02 AM Mar 20, 2025 IST
|
Ramamoorthy S
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே காரில் சென்ற ரவுடி மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் எஸ் எம் சி காலனி பகுதியைச் சேர்ந ரவுடி ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தனது மனைவி சரண்யாவுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்றுள்ளார்.
சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அவர்களது காரை மறித்த சிலர், இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சரண்யா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
Advertisement