செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

08:00 AM Feb 08, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி  நடைபெற்று வருகிறது.

Advertisement

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களுடன் 46 பேர் போட்டியிட்டனர். இறுதியில் 67 புள்ளி 97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள்  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில்  தபால்  வாக்குகள் எண்ணப்படுகின்றன.  17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.

Advertisement

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி பெறுமா அல்லது நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
erode east by election latest newserode east by election who will winFEATUREDMAINerode east by electionerode by electionerode electionerode east election newserode east by election candidateerode east electionerode east by election 2025erode election news todayerode by election ntkerode by election dmkerode east by election result
Advertisement