செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உ.பி. சம்பல் கலவரம் - குற்றப்பத்திரிகை தாக்கல்!

09:14 AM Feb 22, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதி​யில் நடந்த கலவரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்​தில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்​துள்ளது.

Advertisement

சம்பல் பகுதி​யில் உள்ள ​ஷாஹி ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து​விட்டு கட்டப்​பட்​டதாக குற்றஞ்சாட்​டப்​பட்​டது. இது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில், 4 ஆயிரத்து 400 பக்க குற்​றப்​பத்​திரிகையை, சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த சம்பல் காவல்துறை, கலவரம் நடைபெற்ற இடத்​தில் இருந்து துப்​பாக்கி தோட்​டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்​டவை என்றும் கூறியுள்ளது.

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்​தில் உள்ள ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்​டி​விட்​டதாக கூறிய போலீசார், தாவூத் இப்ராஹிம் கும்பல் மற்றும் பாகிஸ்​தானின் ஐஎஸ்​ஐ​உளவு அமைப்புடன் ஷாரிக் சதாவிற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் போலி பாஸ்​போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்​துக்கு தப்பியோடி​ய ஷாரிக் சதா, அங்கிருந்து சம்பல் கலவரத்​துக்கு சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Advertisement
Tags :
Chambal riotschargesheet filled in sambal riotsMAINspecial investigation teamuttar pradesh
Advertisement