செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!

12:46 PM Apr 02, 2025 IST | Murugesan M

அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இருந்தபோது, அப்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கே.சி. பழனிசாமி குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்த நிலையில் அவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி  வரும் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி நீதிபதிகள் சம்மன் வழங்கினர்.

Advertisement
Tags :
ADMKEdappadi Palaniswami summoned to appear in court!MAINஎடப்பாடி பழனிசாமிசம்மன்
Advertisement
Next Article