செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது!

11:05 AM Feb 23, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 5 மீன்பிடி விசைபடகில் இருந்த 32 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையடுத்து, 32 தமிழக மீனவர்களையும், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement
Tags :
32 Rameswaram fishers arrestMAINRameswaram fisherssri lankan navy
Advertisement