செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒய்வு பெற்ற எஸ்ஐ கொலை செய்யப்பட்ட விவகாரம் : நூர் நிஷாவின் சகோதரியிடம் போலீசார் விசாரணை!

07:45 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நூர் நிஷாவின் சகோதரியிட ம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

டவுண் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகிர் உசைன் இடப்பிரச்சனை காரணமாக கடந்த 18-ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை நடப்பதற்கு முன்பாக தன்னை சிலர் கொலை செய்ய முயல்வதாகக் கூறி அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.

போலீசாரின் அலட்சியத்தால் கொலை நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோபால கிருஷ்ணன், செந்தில் குமார் ஆகிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement

இந்த சம்பவத்தில் இதுவரை முகமது தௌபிக், பீர் முகமது உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான நூர் நிஷாவை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, நூர் நிஷாவின் சகோதரி அலி பாத்திமாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINDMKtn policeநெல்லைRetired SI murder case: Police question Noor Nisha's sister!ஒய்வு பெற்ற எஸ்ஐ கொலை
Advertisement