கன்னியாகுமரி : 2-ம் ஆண்டு மாணவனை தாக்கிய சீனியர் மாணவர்கள்!
05:23 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
கன்னியாகுமரியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில், 20 மாணவர்கள் சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவனை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் மாதேஷ் எல்டன் நாகர்கோவிலில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அவரை, 3-ம் ஆண்டு படிக்கும் 20 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாணவன் மாதேஷ் எல்டனுக்கு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
மாணவனை 20 மாணவர்கள் தாக்கிய வீடியோ காட்சி வெளியான நிலையில், தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement