செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற எரிசாராயம் பறிமுதல்!

11:54 AM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாகக் கேரளாவுக்குக் கடத்தி செல்ல முயன்ற சுமார் ஏழாயிரம் லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

கர்நாடகாவிலிருந்து ஓசூர் வழியாகக் கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக, சேலம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவிருந்து  தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 15 கேன்களில் 7ஆயிரத்து 525 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், சஜித் மற்றும் பாபுராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அனீஷ் என்பவரைத் தேடி வருகின்றனர்.

Advertisement
Tags :
Attempted smuggling of liquor from Karnataka to KeralaMAINகர்நாடகா
Advertisement