கர்நாடகா : திடீரென திறக்கப்பட்ட கே.ஆர்.எஸ் அணையின் மதகு!
05:28 PM Mar 25, 2025 IST
|
Murugesan M
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணையின் மதகு திடீரென திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரி நதி ஆற்றில் பாய்ந்தோடி வீணானது.
Advertisement
ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ் நீர்த்தேக்கத்தின் மதகு கேட் திடீரென திறக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் பாய்ந்தோடி வீணானது.
இதையடுத்து அங்கு விரைந்த காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள், திறந்துவிடப்பட்ட மதகுகளை மூடினர். மதகுகள் எவ்வாறு திறந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement