செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

களத்தில் குதித்த இந்தியா: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் AI Volkai அறிமுகம்!

06:15 PM Feb 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அமெரிக்க ChatGPT, GEMINI, OpenAI மற்றும் சீனாவின் Deepseek போன்ற AI களுக்குச் சவால் விடும் வகையில், இந்தியாவின் முதல் ஜெனரேட்டிவ் AI வந்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள Volkai என்னும் AI, இந்திய சந்தைக்காகவே பிரத்யேகமாக வடிமைக்கப் பட்டுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

AI தொழில் நுட்ப சந்தையில் அமெரிக்க நிறுவனங்களே முன்னணியில் இருக்கின்றன. தங்களை விட்டால் AI துறையில் யாரும் இல்லை என்று அமெரிக்க AI நிறுவனங்கள் எண்ணுகின்றன.

இந்த சுழலில் தான், சத்தமே இல்லாமல் சீனாவின் Deep Sake AI கடந்த வாரம் அறிமுகமானது. சர்வதேச தொழில் நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, செமி கண்டக்டர் நிறுவனங்களும் Deep Sake வருகையால் இழப்பைச் சந்தித்தன. தொடர்ந்து, ஒரே நாளில் அமெரிக்க பங்கு சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

Advertisement

இந்நிலையில், Kairosoft AI Solutions என்ற நிறுவனம், Volkai என்னும் பெயரில், இந்தியாவின் முதல் ஜெனரேட்டிவ் AI உருவாக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த உள்ளடக்கம் மற்றும் பட உருவாக்க திறன்களை ஒரே தளத்தில் வழங்கும் முதல் AI இதுவாகும். இந்த திறன்களை ஒரே தளத்தில் வழங்கும் மூலம். AI பயன்படுத்த பல கருவிகளைத் தேவையில்லாமல் போகிறது.

ChatGPT, GEMINI, OpenAI, Deepseek போன்ற AI கள், பெரும்பாலும் அதிக கட்டணங்களை வைத்துள்ளன. மேலும் அவை இந்திர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதில்லை.

இந்திய சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், Volkai AI வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட AI தொழில் நுட்பத்துடன்,எளிதில் அணுக கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய கலாச்சாரம் மற்றும் பல்வேறு இந்திய மக்களின் பேச்சுவழக்குகளின் நுணுக்கங்களை இந்த Volkai AI புரிந்து கொள்கிறது.

இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அவரவர் நிலம்,மொழிக்குப் பொருத்தமான உள்ளடக்கம் மற்றும் படங்களை Volkai AI உருவாக்குகிறது.

சுருக்கமாக இந்திய பன்முக கலாசார உணர்திறன் மிக்கதாக இந்த Volkai AI உள்ளது. இது உலகிலேயே முதல் கலாச்சார நுண்ணறிவு தொழில் நுட்பமாகும். இது மின் வணிகம் மற்றும் கல்வித் துறைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

விஷன் கிரியேட்டர் என்ற அம்சத்துடன் விளங்கும் இந்த Volkai AI யதார்த்தமான காட்சிகளை உருவாக்கவும் , மிகையான காட்சிகளை உருவாக்கவும் அனுமதிக்கிறது. அதாவது, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதற்கேற்ற இமேஜ்கள் மற்றும் நவீன புடவை வடிவமைப்புகள் கலாச்சார ரீதியாக உருவாக்கவும் பயன்படுகிறது.

புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம், சிறு வணிகர்கள், கல்வியாளர்கள்,மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட பணிகளுக்கு Volkai AI பயன்படுத்தமுடிகிறது.

'அனைவருக்கும் AI' என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக, இந்த Volkai AI கட்டமைக்கப்பட்டுள்ளதாக கைரோசாஃப்ட் AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இப்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும், இந்த Volkai AI இந்திய பழக்கவழக்கங்கள், பேச்சுவழக்குகள் மற்றும் கலாசாரத்தைப் புரிந்து கொண்டு செயல்படுகிறது.

சர்வ தேச அளவில் AI மேலாதிக்கத்திற்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது.

வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவை சார்ந்திருப்பதைக் குறைத்து, தன்னம்பிக்கை கொண்ட தனித்த டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, AI ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.

18,000 GPU-கள் செயல்பாட்டில் இருப்பதால், நாட்டின் தனித்துவமான மொழியியல், பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு உள்நாட்டு AI மாதிரியை உருவாக்கும் பாதையில் இந்தியா சிறப்பாக உள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINIndiaunion minister ashwini vaishnawIndia jumps into the fray: Introducing the first indigenously developed AI Volkai!AI Volkai
Advertisement