செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காம்பவுண்ட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப்பொருளை தேடிய யானை!

02:53 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கோவை மாவட்டம் தாலியூர் பகுதியில் வீட்டின் காம்பவுண்ட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப்பொருளைத் தேடிய யானையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

தடாகம், மாங்கரை, தாலியூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், தாலியூர் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களைச் சேதப்படுத்தியது.

Advertisement

அதைத்தொடர்ந்து வீட்டின் காம்பவுண்ட் சுவருக்கு மேல் தும்பிக்கையை நுழைத்து உணவுப் பொருள் உள்ளதா எனத் தேடியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், விவசாயிகள் மற்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement
Tags :
An elephant stuck its trunk into the compound and searched for food!MAINகோவை மாவட்டம்
Advertisement