காவலர் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!
03:26 PM Mar 19, 2025 IST
|
Murugesan M
அவனியாபுரம் அருகே எரிந்து நிலையில் காவலர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
மதுரை மாவட்டம், அவனியாபுரம் தனியார் ஹோட்டல் அருகே எரிந்த நிலையில் இளைஞரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், உயிரிழந்தவர் அழகாபுரியைச் சேர்ந்த மலையரசன் என தெரியவந்தது.
மேலும், சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் உள்ள காவல் நிலையத்தில் மலையரசன் காவலராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, காவலர் மரணம் தொடர்பாகத் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement