செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

08:38 AM Feb 28, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

மகா கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அறிவித்துள்ளார்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் போனஸாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார்.

அதேபோல, சுகாதார ஊழியர்களுக்கும் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தூய்மை பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஏப்ரல் மாதம் முதல் போனஸ் தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

அத்துடன் தூய்மை பணியாளர்களின் ஊதியமும் 11 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
bonus for sanitation workersFEATUREDKumbh Melakumbh mela 2025maha kumbhmaha kumbh 2025Maha Kumbh Melamaha kumbh mela 2025MAINprayagraj maha kumbh mela 2025sanitation workersUttar Pradesh Chief Minister Yogi Adityanath
Advertisement