செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கும்ப மேளா கூட்ட நெரிசல் - உ.பி. முதல்வரிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

07:45 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கும்ப மேளா கூட்ட நெரிசல் தொடர்பான  விவரங்களை  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா  கேட்டறிந்தனர்.

Advertisement

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 14ம் தேதி தொடங்கியது.  அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில்  கோடிக்கணக்கான பக்தர்கள்  திரண்டு  திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு இன்று பக்தர்களின் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தடுப்புகளை அகற்றி பக்தர்கள்  வெளியேற முயன்றனர். அப்போது சுமார் 50 பக்தர்கள் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கும்ப மேளா கூட்ட நெரிசல் தொடர்பான  விவரங்களை  பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதேபோல் கூட்ட நெரிசல் விவரங்களை கேட்டறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா,  தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய  அரசு தயாராக  உள்ளதாகவும் கூறினார்.

Advertisement
Tags :
amth shahFEATUREDMahakumbh MelaMahakumbh Mela in Prayagraj.MAINmodi speaks to yogiPrayagrajprime minister narendra modistampede in kumbamelaUttar Pradesh Chief Minister Yogi Adityanath
Advertisement