செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் 4 பள்ளி மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி!

10:19 AM Sep 22, 2024 IST | Murugesan M

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் 4 பள்ளி மாணவிகள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அய்யனேரி கிராமத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் 88 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் காலாண்டு தேர்வு தொடங்கியதையடுத்து 8-ஆம் வகுப்பு மாணவிகள் உடற்கல்வி தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

அப்போது 4 மாணவிகள் காப்பியடித்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட ஆசிரியர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவிகள், மருந்தகத்தில் இருந்து கொசு மருந்து வாங்கி குடித்துள்ளனர்.

Advertisement

சற்று நேரத்தில் மயக்கமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement
Tags :
4 schoolgirls trying to commit suicideKovilpattiMAINteacher reprimandedyyaneri village.
Advertisement
Next Article