சபரிமலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் தபால் நிலையம் திறப்பு!
12:43 PM Nov 21, 2024 IST
|
Murugesan M
ஆண்டிற்கு ஓரு முறை மட்டுமே செயல்படும் சபரிமலை தற்காலிக தபால்நிலையம் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ஐயப்பனுக்கு லெட்டர் போட்டு பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Advertisement
சபரிமலையில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை நேரங்களில் மட்டும் தற்காலிக தபால்நிலையம் ஆயிரத்து 963ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐயப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரை ஆயிரத்து 974 ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
மண்டல, மகரவிளக்கு பூஜை நடைபெறும் காலத்தில் மட்டுமே இந்த தபால் எண் செயல்பாட்டில் இருக்கும். 62 நாட்களுக்கு பிறகு இந்த அஞ்சல் குறியீட்டு எண் செயலிழப்பு செய்யப்படும்.
Advertisement
Advertisement