செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சீர்காழி அருகே 11 கோயில்களின் பெருமாள் எழுந்தருளி வீதியுலா!

11:56 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11 கோயில்களின் கருடசேவை உத்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

திருநாங்கூர் பகுதியில் ஸ்ரீநாராயணபெருமாள், குடமாடகூத்தர், செம்பொன்னரங்கர் உள்ளிட்ட 11 கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசையின் மறுநாள் கருடசேவை உத்சவம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், 131-ஆம் ஆண்டு கருடசேவை உத்சவத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Advertisement

இதையடுத்து நடைபெற்ற வீதியுலாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.

Advertisement
Tags :
aruda Seva Utsavam of 11 templesGaruda Seva UtsavamKudamada KootharMAINMayiladuthuraiNarayana PerumalsirkazhiThai Amavasya
Advertisement