செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் : புகார் அளித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல்!

01:49 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தென்காசி அருகே சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் குறித்து புகார் அளித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விஸ்வநாதப்பேரி பகுதியைச் சேர்ந்த நாதக பிரமுகர் கார்த்திக் அங்குள்ள செங்கல் சூளையைப் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அதன் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த பணியாளர்கள் தம்மைத் தாக்கியதாக கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்காமல், தம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Advertisement

மேலும், சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் குறித்து புகார் அளித்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

Advertisement
Tags :
Attack on Naam Tamilar Party leader over brick kiln photo!MAINசெங்கல் சூளை
Advertisement