சென்னையில் மீன் பாடி வண்டிகளைக் குறிவைத்துத் திருடிய நபர் கைது!
02:47 PM Apr 05, 2025 IST
|
Murugesan M
சென்னையில் டிரை சைக்கிள்களை மட்டும் குறிவைத்துத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் ஆயுப் என்பவர் டிரை சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதுகுறித்து கலியபெருமாள் என்பவர் செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஷேக் ஆயுப்-ஐ கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 11 டிரை சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement