செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜெகபர் அலி கொலை : 5 பேருக்கு போலீஸ் காவல்!

04:44 PM Feb 03, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

புதுக்கோட்டையில் சட்ட விரோத கனிமள கொள்ளை மற்றும் கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கொலை வழக்கில் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, மற்றும் ராசுவின் மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் 5 பேரையும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி 5 பேரையும் 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
FEATUREDJagabar Ali murder: 5 people in police custody!MAINNellaitamil nadu news todaytn police
Advertisement