செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைப்பு!

05:55 PM Feb 15, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் ஆயிரத்து 562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் ஆயிரத்து 562 ஏக்கர் நில ஆவணங்களையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் நில ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement
Tags :
JayalalithaJewels owned by Jayalalitha handed over to anti-bribery department!MAINtamil nadu news
Advertisement