காட்டு மிராண்டிகளின் மொழி தமிழ் என்று கூறிய ஈவெரா, பெரியாரா? - சீமான் கேள்வி!
08:14 AM Jan 29, 2025 IST
|
Sivasubramanian P
தமிழ் சனியின், காட்டு மிராண்டிகளின் மொழி என்று தெரிவித்த ஈவெரா பெரியாரா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீதாலட்சுமியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, "திராவிடத்தை ஒழிக்காமல் எங்களுக்கு தூக்கமில்லை என தெரிவித்தார்.
திராவிட கட்சியின் 60 ஆண்டு குப்பைகளை எரிக்க வந்துள்ளதாக தெரிவித்த அவர், பெரியார் வெங்காயத்தை என் மீது வீசு; நான் வெடிகுண்டு வீசுகிறேன் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement