செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுகவின் நாடகத்திற்காக சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம் - அண்ணாமலை வலியுறுத்தல்!

12:17 PM Apr 03, 2025 IST | Ramamoorthy S

முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணரவில்லையா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சட்டப்பேரவைக்கு திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தது நாடகச் செயல் என்றும்,
வக்பு மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக முதலமைச்சர் அறிவித்தது துரதிருஷ்டம் எனவும் விமர்சித்துள்ளார்.

சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக சட்டப்பேரவையில் நாடகம் நடத்தப்பட்டதாக கூறிய அவர், தயவுசெய்து சட்டப்பேரவையை நாடகம் நடத்துவதற்காக திமுகவினர் பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

Advertisement

வக்பு மசோதாவை எதிர்ப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில் அப்பாவி இஸ்லாமியர்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே திமுகவுக்கு தெரியும் என விமர்சித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDhief Minister StalinMAINTamil Nadu BJP leader AnnamalaiWaqf Act. issue
Advertisement
Next Article