திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி பெருவிழா - விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!
11:34 AM Mar 19, 2025 IST
|
Ramamoorthy S
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Advertisement
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 5-ஆம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகமாக நடைபெற்றது.
தெய்வானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை அடுத்து, அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Advertisement
Advertisement