செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மத மாற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை தேவை - இந்து மக்கள் கட்சி நூதன போராட்டம்!

07:30 PM Dec 02, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினர் ஊர்வலமாக சென்று மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபநாட்களாக கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்த குமார் தலைமையில் அக்கட்சியினர் தீச்சட்டி ஏந்தி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு திருநீர், குங்குமம் பிரசாதமாக வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் இந்துக்களுக்கும் அதற்கான அனுமதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINhindu makkal katchihindu makkal katchi demoThoothukudi Government Hospital.Christian conversions
Advertisement