செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தெலங்கானா : 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

01:02 PM Mar 27, 2025 IST | Murugesan M

தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

பத்ராச்சலம் நகரில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அலுவலகம் அருகே 2 மாடிகளைக் கொண்ட கட்டடம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் மீது மேலும் 4 மாடிகளைக் கட்டுவதற்கு உரிமையாளர் முடிவு செய்தார்.

அதன்படி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

Advertisement

தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
MAINTelangana: Accident as 6-storey building collapses!தெலங்கானா
Advertisement
Next Article