ஈஷா மஹா சிவராத்திரி பக்தியின் கும்பமேளா - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மஹா சிவராத்திரியையொட்டி தேசம் முழுவதும் சிவமயமாக காட்சியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Advertisement
கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். முன்னதாக ஈஷா யோகா மையத்திற்கு சென்ற அமித்ஷா, அங்குள்ள லிங்க பைரவியை மனமுருகி வழிபட்டார். அதைத் தொடர்ந்து திரிசூலத்தில் மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்தணை மேற்கொண்டார்.
தொடர்ந்து யோகா மையத்தை முழுமையாக சுற்றிப்பார்த்த அமித்ஷா, யோகேஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

பிராயாக்ராஜ்ஜில் மஹா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தேசம் முழுவதும் சிவமயமாக காட்சியளிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பக்திக்கான திருநாளாக சிவராத்திரி விழா திகழ்வதாக கூறிய அவர், பக்தியின் வெளிப்பாடே மகா சிவராத்திரி எனத் தெரிவித்தார். மேலும் சத்குரு, தர்மத்தின் மேன்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் அமித்ஷா கூறினார்.