செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேனி : துணை காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

12:01 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊர்த் தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய  ஆத்திரத்தில் நாட்டாமையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவிற்குப் பந்தல் அமைப்பவர் உட்பட பல்வேறு நபர்களிடம் ஊர்த் தலைவர் சக்திவேல் கமிஷன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனால், ஆத்திரம் அடைந்த சக்திவேல் ஊர் நாட்டாமையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Advertisement

Advertisement
Tags :
MAINTheni: Public besieges the Deputy Superintendent of Police's office!Tn newsதேனி
Advertisement