செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெல்லை - ஒரே நாளில்10க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய தெருநாய்கள்!

02:20 PM Apr 03, 2025 IST | Ramamoorthy S

கல்லிடைக்குறிச்சியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய் கடித்துள்ளது. இதேபோன்று, செட்டி பிள்ளைவாள் தெருவை சேர்ந்த 2 சிறார்கள் உட்பட 10 பேரை தெருநாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Kallidaikurichidogs bitingdogs biting more than 10 peopleNellai
Advertisement
Next Article