செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெல்லை : ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை!

04:47 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நெல்லை தடி வீரன் கோயில் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசைன், அப்பகுதியில் உள்ள மசூதியில் முத்தவல்லியாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாகிர் உசைனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையர் கீதா தலைமையிலான போலீசார், ஜாகிர் உசைனின் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி அவர் பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Tags :
MAINNellai: Retired police officer hacked to death by mysterious individuals!Tn newsஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை
Advertisement